வந்தவாசி அடுத்த சென்னாவரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் திரு.சே.வீரராகவன் தலைமையில் கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல் சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. மேலும் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் பெற்று கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்து ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் குழுவினர், கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.